Monday, July 16, 2012

இந்து மதத்துல மத  வெறியர்கள் இருக்கிற மாதிரி பவுத்த மதத்திலும் மத வெறியர்கள் உள்ளனர். இந்து மதம் மத வெறியை; கொலை வெறியை; ஜாதி வெறியை; இன வெறியை தூண்டுகிறது. புத்தம் அதை மறுக்கிறது. புத்தத்தை பின் பற்றுபவர்கள் மத வெறியர்களாக இருக்க கூடாது என புத்தர் போதித்தார். தங்களை பவுத்தர் என சொல்லிக்கொண்டு ஒருவர் மத வெறியராக இருந்தால் அவர் புத்தத்தை பின் பற்ற வில்லை என சொல்லலாம். புத்தத்தின் பெயரில் ஒருவர் கத்தி எடுப்பது துப்பாக்கி எடுப்பது புத்தத்துக்கு எதிரானது. ஆனால் இந்து மதம் அது  போன்ற கொல்லாமை தத்துவத்தை போதிக்க வில்லை. தர்மத்தை காக்க போர் செய்ய வேண்டும் கொலை செய்ய வேண்டும் என போதிக்கிறது. ஆளும் பரம்பரையினர் கொலை செய்ய பிறந்ததாக் வருணிக்கிறது. இதற்க்கு சான்று பகவத் கீதை. அது போன்ற கொலை வெறியை  வன்முறையை வருண (ஜாதி) வெறியை தூண்டும் ஒரு நூல் புத்தத்தில்  இல்லை. அப்படி இருந்தால் அது புத்ததம்ம நூல் இல்லை என சொல்லலாம்.   

No comments: