Sunday, September 23, 2012

இதை தப்புன்னு சொல்லல எங்களை தப்புன்னு சொன்னதை தப்புன்னு சொன்னேன்.


உங்க ஆளு எங்கள் தலைவர்களை எப்படியெல்லாம் நக்கால் அடிச்சிருக்காரு தெரியுமா..... வெங்காயம்...


அவசியமா இல்லையானு நாங்க முடிவு பண்ணிக்கிறோம். அதுக்கு நீங்க நக்கல் அடிக்க கூடாது. அது பெண்கள் முடிவு செய்ய வேண்டிய விஷயம். அதில் தவறு இருப்பின் எடுத்து சொல்லுங்கள். பிடிக்குது கட்டிக்கிறோம் அபப்டின்னு பெண்கள் சொன்நா அதை மூடத்தனம் முட்டாள் தனம் என ஆண் சொல்லுவதும் ஆணாதிக்கமே..


ஒரு பொம்பளைய பப்ளிக்கா நிக்க வச்சு நாலு ஆம்புளைங்க தாலி அருப்பங்க அது அடிமை தனம் இல்லையா..  தாலி கட்ட கழுத்த நீட்டனும் தாலி அறுக்க கழுத்தை நீட்டனும். எது அடிமை தனம்....


அது கூட தப்புதான். ஆணாதிக்கம் தான்...

அத நீங்க கேளுங்க....

ராமசாமி கேட்டார்னு கேக்காதீங்க......


இவரு மட்டும் ஆன்மீக வாதிகள் கிட்ட நண்பரா இருப்பாராம். நாங்க  ஆன்மீகவாதிகள் கிட்ட நண்பரா இருந்தா உடனே நாம பார்ப்பன அடிவருடி மூட நம்பிக்கைக்கு துணை போகும் முட்டாள்கள். 


ராமசாமி என்கிற ஆண் பேசியது  இருக்கட்டும். ராமசாமிக்கு பகுத்தறிவு சொல்லிகொடுத்த  தென்னிந்திய சாக்கிய  புத்த சங்கத்துல பெண்களால் தலைமை ஏற்று  நடத்தப்பட்ட மாநாட்டில் தாலி இந்துக்களின் பண்பாடு  புத்த சமைய பெண்கள்   தாலி கட்டிக்க மாட்டோம்னு பெண்கள் கூடி ஒரு முடிவு எடுத்தாங்க, அதை அந்த மாநாட்டில் கலந்து கொண்ட அணைத்து சாக்கிய (தலித்) பெண்களும் ஆமோதித்தனர் என பதிவு செய்து உள்ளனர்.  


இப்படியே ஆண்ககள் யோசித்து உங்களுக்கு முடி எடுப்பங்க நீங்க கேட்டுட்டே இருங்க...நல்ல சமத்துவம். 


தமிழ் ஹிந்து  பெண்கள் தாலி கட்டிகுவாங்க. 


ஹிந்து தமிழ் பெண்கள் கட்டிக்க கூடாதுன்னு நாங்க சொன்னா நம்ம தமிழ் தேசிய தலைவர் ஐயா  ஜோஷுவா வந்து என்னை பவுத்த வெறியன். தமிழர்களின் உரிமைகளில் தலையிடுகிரான்னு சொல்லுவாரு... நமக்கு ஏம்பா வம்பு.. அதுங்க கட்டும் அறுக்கும்.  கட்டுரதுக்கு ஒருகூட்டம். அருக்கரதுக்கு ஒரு கூட்டம். 






No comments: