Tuesday, September 18, 2012

அடுத்த முறை இந்தியா போகும்போது தயவு செய்து இலங்கைக்கு ஒரு டிக்கட்டு போடுங்க. அங்க போய் நேர்ல ஈழத்து ஜாதி வெறியை பார்த்து விட்டு வ்ந்து இதை சொல்லுங்க. தமிழ் நாட்டு ஜாதி வெறியர்கள் எவ்வளவோ மேல்னு சில ஈழத்து தலித்துக்கள் சொல்றாங்க. சமூக உணர்வு இல்லாமல் ஆண்டைகளுக்கு பயந்து அடிமையா இருந்தா வன்கொடுமைகள் அதிகம்  இருக்காது. அதுக்காக தீண்டாமை இல்லை ஜாதி கொடுமை இல்லைன்னு நினைச்சிக்க கூடாது. கொஞ்சம் பொறுங்க இப்பதானே அவுங்க துப்பாக்கிய புடிங்கி இருக்காங்க. இப்ப நம்ம மக்கள் அங்கு நம்ம வேலைய ஆரம்பிப்பாங்க. அப்புறம் அங்கும் வன்கொடுமைகள் நமக்கு எதிரா ஆரம்பிக்கும்  அப்ப தெரியும் ஈள டமிலர்கள்  ஜாதி அற்றவர்களா இல்லை ஜாதி வெறியர்காளான்னு............ 


ஈழத்துல கூட பிரபாகரனோடு இருந்தவங்க கரையார்கள் என்றும் கருணாவோடு இருந்தவர்கள் தலித்துக்கள் என்றும் சொல்றாங்க... ஒவ்வொரு தமிழ் தேசிய கட்சிக்கு பின்னாலும் ஒரு ஜாதி இருப்பது உலகறிந்த உண்மை.

 பிரபாகரனை எளிய ஜாதி கரையான் என்று முக புத்தகத்தில் திட்டுவதையும். கருணாவை தலித் அடையாளங்களை வைத்து திட்டுவதையும் பார்க்கலாம்.


 செல்வநாயகம் அவர்களின் நினைவுநாள் பொதுக்கூட்டம் (26.4.12) அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அவ்விழாவில் கலந்துகொண்ட மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்ää அமைச்சருமான ராஜதுரை என்னும் தலைவர் உரையாற்றத் தொடங்கியபோது டெலோவின் முன்னாள் உறுப்பினரும்ää தமிழ்த்தேசியக் கூட்டணியின் முன்னாள் தலைவருமான சிவாஜிலிங்கம் அவரைப் பார்த்து அடே சக்கிலியா! துரோகி! எனக்கூச்சலிட்டு கலாட்டா செய்துள்ளார். கூச்சலிட்ட சிவாஜிலிங்கம் கரையார் சாதியைச் சேர்ந்தவர். அவமதிக்கப்பட்ட ராஜதுரை முக்குவர் சாதியைச் சேர்ந்தவர். அப்புறம் ஈழத்துல ஜாதி இல்லைன்னு நாம நம்பிட்டு இருக்கோம்.

முதலில் கரையான் அப்புறம் தமிழன்

ஆதி திராவிட இயக்கம் நடத்தியவர்களை அடித்து நொறுக்கி இயக்கம் இல்லாமல் செய்தவர்கள் தான் இந்த புலிகள்.



///கண்டிப்பாய் அடுத்த தலைமுறையில் ஈழத்தில் தீண்டாமை என்பது சுத்தமாய் அழிந்து போகும். கொஞ்சம் கொஞ்சம் ஜாதியும் அழிந்து போகும். "தமிழன்" என்ற ஒரே ஒரு பெயர்தான் இருக்கும். /// இப்ப எல்லாம் அப்படியே கனவு உலகத்துல மிதந்துட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். நல்ல ஆய்வாளர் சும்மா நாலு கரையான்கள்  கிட்ட கதை கேட்டுட்டு இலங்கையில் ஜாதி இல்லைன்னு தீசிஸ் சப்மிட் பண்ண கூடாது. நம்ம ஜோஷுவா, மகிழ்நன், நிலவு இன்னும் நம்ம சர்கிள்ள இருக்கும் ஒரு நாலு அஞ்சு பேரை இலங்கைக்கு அனுப்புவோம் (அவுங்க போக தயாராக இருந்தால்). அவுங்க அங்கு போய்  நேர்மையா ஜாதி தீண்டாமை பத்தி ஒரு ஆய்வு பண்ணிட்டு வரட்டும். ஜாதிய புலிகள் ஒழிச்சாங்களா இல்லை ஜாதி ஒழிப்பை பேசிய இயக்கங்களை ஒழிச்சாங்கலான்னு ஆய்வு பண்ணட்டும். அதற்கான செலவை நாம ஒரு பத்து பேர் ஏத்துக்கலாம். சரின்னா புது டில்லியில் தலித் ஆய்வு மையத்தில் வேலை செய்யும் நம்ம தம்பி செல்வராஜை தொடர்பு கொள்ளுவோம். ஏற்க்கனவே இலங்கை தலித் சம்பந்தமா அங்க கொஞ்சம் ஆய்வு பண்ணி இருக்காங்க.


 








No comments: