Thursday, December 6, 2012

அண்ணலை ஏற்கும் பார்ப்பனர்கள் ராமசாமியை ஏற்பது இல்லை. எனவே ராமசாமிதான் மிகவும் புரட்சியாளர்கள் என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது. பார்ப்பனர்கள் மட்டும் அல்ல கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்துள்ள சூதிரர்களும் அண்ணலை ஏற்பார்கள். ஏனெனெனில் அது அவரின் போதிசத்துவ பண்பு. எதிரிகளையும் நேசிக்கும் மானுடம். தர்மபுரியை போல ஆயிரம் கொடுமைகளை வாழ்வில் கண்டவர் அண்ணல் ஆனால் அவர் எங்குமே அடிச்சா திருப்பி அடி கண்ணுக்கு கண் கொலைக்கு கொலை ரத்தத்துக்கு ரத்தம் எனும் பழி உணர்ச்சியை தூண்டியது இல்லை. பாம்பைக்கண்டால் விடு பார்ப்பானைக்கண்டால் அடி என்று போதித்தது இல்லை. நமது புரட்சி இரத்தப் புரட்சி அன்று அது மனித நேயம் காக்கும் மானுடப் புரட்சி என்றார். கொலை வெறியும் காம வெறியும் பிடித்த கயவர்கள் கூட நல்ல மனிதர்களாக மாற வாய்ப்பு உண்டு என்றார். சட்டம் தனது கடமையை செய்ய நாம் போராட வேண்டும் என்று தம்ம வழி போராட்டத்தை நமக்கு காட்டினார்.  நமக்கு வெறுப்பு கலாச்சாரத்தை சொல்லி கொடுக்கவில்லை. வன்முறை கலாச்சாரத்தை சொல்லிக்கொடுக்கவில்லை. பம்பாய் மாகானத்தில்  சூத்திர கூட்டம்  பார்ப்பனர்களை பூணூல் அறுத்து அடித்து ரவுடித்தனம்  செய்தபோது சிறுபான்மையினரான பார்ப்பனர்களுக்கு அரசு பாத்து காப்பு கொடுக்க வேண்டும் என்று பேசியவர் அண்ணல். அந்த கருணாமூர்த்தியை பாசிச இன வெறியர் ராமசாமியுடனும் தீவிரவாத கூட்ட தலைவர் பிரபாகரனுடன் ஒப்பிடுவதா? கொடுமை.....

1 comment:

sagazoakey said...

Best Casinos Near Minneapolis-St. Paul, MN - MapyRO
Casino 성남 출장안마 NamePhoneTotal Games1021‑2021Phone#Phone4Caesars 과천 출장안마 Casino, Hotel&Casino 계룡 출장마사지 5131721‑2021Phone#Address622‑18View 상주 출장마사지 129 안성 출장안마 more rows