Thursday, November 22, 2012

///// இவர்கள் மீது ஏன் வன்கொடுமை சட்டம் பாயவேண்டும் ?////// இவர்கள் தலித் மக்களை அவதூராக திட்டி  போஸ்டர் போட்டு உள்ளனர் தற்போது உள்ள வன்கொடுமை சட்டப்படி அது கிரிமினல் குற்றம். "வெட்டுவோம் குத்துவோம்னு" பேசுறது  எல்லாம் வன்கொடுமை சட்டதில் வராது.  வேறு ஏதாவது சட்டதில் வருமா என்று சட்டவல்லுனர்களிடம் கேட்டு அதன் கீழ் பதிவு செய்யுங்கள். வெட்டுங்கள் குத்துங்கள் என்று யாராவது வன்முறையை தூண்டி விட்டு அதன் மூல தலித்துக்கள் எவரேனும் பாதிக்கப்பட்டால் அது வன்கொடுமை சட்டப்படி  கிரைம். எடுத்து காட்டு காடுவெட்டி குரு காதல் திருமணம் செய்தால் வெட்டுங்கள் என்று சொன்ன பிறகு தற்ப்போது தொடர்ந்து தலித்துக்களுக்கு எதிராக வன்முறைகள் ஏற்ப்பட்டு வருகிறது. இந்த போஸ்டரில் சொல்லப்பட்டிருக்கும் வாசகங்கள் நேரடியாக தலித் மக்களுக்கு எதிராக சொல்லப்பட்டு உள்ள ... " ...........ஆதி தமிழர் ஆகிய பேர்களில் செயல் படும் பாதி தமிழராக கூட இல்லாத தெலுங்கை தாய் மொழியாக கொண்டு பஞ்சம் பிழைக்க வந்தவர்களான சமூக விரோதிகள்" எனும் வாசகம் வன்கொடுமை சட்டம் SC & ST  Sec 3 (1) (x)  யின் படி கிரிமினல் குற்றம். ".......... 


ஜாதி பெயரை சொல்லி திட்டுவது மட்டும் வன்கொடுமை அல்ல. வன்கொடுமை சட்டம் Sec 3 (1) (x)  படி ஒரு ஜாதி இந்து தலித்தை "சீ" என்று பொது இடத்தில் திட்டினால் கூட இந்த சட்டம் பாயும். 

இந்த வாசகம் SC (அருந்ததிய) மக்களுக்கு எதிராக SC அல்லாத மக்களால் அவர்களை இழிவு படுத்தும் விதத்தில் சொல்லப்பட்டு உள்ளது. இது வன்கொடுமை சட்டப்படி குற்றம். 

எங்களுக்கு எங்கே வலிக்குதுன்னு வலிக்கிரவங்களுக்கு தெரியும் ஜாதி வெறி பிடித்து அலைபவர்களுக்கு தெரியாது. 



ஆதி தமிழர்கள் என்று அவர்கள் சொன்னது SC மக்களை என்பதும் அது கிரிமினல் குற்றம் என்பதும்தான் இங்கு வதம் எங்களுக்கு எங்கே வலிக்குதுன்றது வாதம் அல்ல.

சாக்கியர்கள்தான்  ஆதி தமிழர்கள், ஆதி திராவிடர்கள், ஆதி ஹிந்துக்கள், ஆதி தெலுங்கர்கள். ஆதி தர்மிகள், ஆதி கர்நாடகர்கள். 

ஆதி எனும் பெயரில் ஆயிரம் இயக்கங்கள் நடத்தியவர்கள் சாக்கியர்களே. தமிழ் நாடு  சாக்கிய அருந்ததிய சங்கம் கேள்வி பட்டு இருக்கீங்களா?

விடுதலை இது லீகல் பிரச்சனை ஓவரா பேச வேண்டாம். நீங்க SC அல்லாதவரா இருந்தா ரொம்ப பிரச்சானை. 


No comments: