Friday, November 23, 2012

சேரியை ஏமாற்றும் சூத்திர கூட்டத்தின்  ஜாதி மறுப்பு திராவிட நாடகம். எங்களுக்கு இந்த நாடகம் தேவை இல்லை. சமூக நீதி சம உரிமை சம பங்கீடு. சூத்திரர் ஆதிக்கத்தில் உள்ள கோடிக்கணக்கான திராவிட கழக சொத்துக்களில் சாக்கிய மக்களை பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ள இந்த வீரமணி தயாரா? சூதிரர்கள் மட்டுமே பயன் அடையும் திராவிட கழகத்துக்கு சொந்தமான்  ஆயிரம் ஆயிரம்   கல்வி வேலை வாய்ப்பு நிறுவனங்களில் சாக்கிய மக்களுக்கு உரிமை உண்டா? உங்கள் சூத்திர நாடகத்துக்கு விலை போக சில அன்னக்கைகள் உள்ளனர். அவர்களை கூப்பிட்டு உங்கள் சூத்திர நாடகத்துக்கு விளம்பரம் தேடிக்கொள்ளுங்கள். அங்கே எரிந்து நாசமான வீடுகளுக்கு நீதி இல்லை. கொளுத்தியவன் எல்லாம் ராஜாவாக நாட்டில் மாவீரகள் போல திரிந்து கொண்டு உள்ளனர். உண்மையான் சமூக நீதி போராளிகளாக இருந்தால் அரசை நிர்பந்தப்படுத்தி அனைத்து குற்றவாளிகளுக்கும்  தண்டனை வாங்கி கொடு. அடுத்த முறை சாக்கியர்  வீடுகளை எரிக்க துணியும் கைகள் அரசின் தண்டனையை எண்ணி அலற வேண்டும். இது வரை வன்கொடுமைகளுக்கு சரியான தண்டனை கொடுக்காமல் சூத்திர அரசியல் அவர்களை விடுவதால் தொடர்ந்து வன்கொடுமைகள் நடக்கிறது. எங்களுக்கு தேவை சமூக நீதி. சேரியை ஏமாற்றும்  இந்த போலி கலப்பு திருமண அரசியல் விளையாட்டு அல்ல. 

No comments: