Thursday, November 1, 2012

//////தலித்தியம் பேசுகிற தோழர்களே, அறிவுக்கடலாய் விளங்கும்
அண்ணல் அம்பேத்கர் அவர்களை
சின்னஞ்சிறிய சிமிழுக்குள் அடைக்க நினைப்பது எந்த வகையில் நியாயம்?///// தலித்தியம் பேசும் தோழர்கள் தெளிவா கத்தான் இருக்கிறார்கள். பார்பநியதுக்கு அடி வருடும் அன்பர்கள் அண்ணலை சூத்திரர்க்கு எதிரியாகவும் சூத்திரர்க்கு அடிவருடும் அன்பர்கள் அண்ணலை பார்பனர்களுக்கு எதிரியாகவும் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். அதை எடுத்து சொன்னா நாங்க அவரை சின்னஞ்சிறிய சிமிழுக்குள் அடைக்க நினைக்கிரோம்னு ஆரிய அடி வருடிகளும் திராவிட அடிவருடிகளும் எங்களுக்கு முத்திரை குத்துராங்க. மேலே நீங்கள் சொன்ன அண்ணலின் கருத்தை பார்ப்பனியத்துக்கு கூஜா தூக்கும் கூட்டம் ஏற்காது. அது பலவே உங்களை போன்ற ஆட்கள் சூத்திர ஆதிக்கத்துக்கு எதிராக அண்ணல்  சொன்ன கருத்துக்களை மூடி மறைப்பீர்கள். நான் அண்ணலை பரப்பான எதிர்ப்பு ஆளாகவோ சூட்டிற எதிர்ப்பு ஆளாகவோ திரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஹிந்து எதிர்ப்பாளர். ஹிந்து என்பதில்  பார்பனர் முதல் சூத்திரர் வரை அனைவரும் அடங்குவர். அண்ணல் ஜாதி இந்துக்கள் எனும் சொல்லை பயன்படுத்துவார். பார்ப்பனர்களையும் சூத்திரர்களையும் பொதுவாக குறிக்கும் சொல் அது. அண்ணல் இதியாவில் உள்ள சமூகங்களை தீண்டப்படும் சமூகம் தீண்டாசமூகம் என பிரிக்கிறார். அனைத்து தீண்டபப்டும் சமூகமும் நம்மை ஒடுக்குகிறார்கள் என்பதே அண்ணலின் கருத்து......  பாலா கோப படாம யோசிங்க யோகா எல்லாம் பண்ணுறீங்க!!!!!!!! :) :) :)  பார்ப்பன எதிர்ப்பு பேசும் சைதை அன்பரசன் அன்போடு பதில் சொல்லிட்டு இருக்காரு பாருங்க அதான் தம்மம். அவர் இந்த பண்பை பார்ப்பனர்களிடம் கற்றுக்கொள்ளவில்லை. வள்ளுவத்தை தந்த ஆதி திராவிட சாக்கிய பறையர்களிடம் கற்றுக்கொண்டார். அன்போடு உரையாடுங்கள்......விமர்சனங்கள் வரவேற்க்கபடுகின்றன... உங்கள் கண்களுக்கு நான் எப்படி தெரிகிறோனோ அது போல பலர் கண்களுக்கு பல விதமாக தெரிகிறேன். அண்மையில் ஒரு சகோதரர், நிச்சயம் அவர் நம்ம சகோதரராகத்தான் இருப்பார். நீ ஒரு சிங்கலவனாகத்தான் இருப்பாய் என்றார் அது அவர் கருத்து. உணமையாக தலித்தியம் மட்டும் பேசுபவர்களுக்கு தெரியும் நான் யார் என்று.....அவர்கள் மட்டும் என்னுடன் வந்தால் போதும்......

No comments: