Monday, October 15, 2012

பார்ப்பனர்களும் ஜாதி இந்துக்களும் நம் மீது இழிவை துப்பிய காலம் போய் தற்போது திராவிடத்துக்கும் தமிழியதுக்கும் ஆள்   பிடிக்கும் கூட்டம் நம் மீது இழிவை துப்புகிறது. நம்மை நாம் பெருமையோடு பார்ப்பதை ஏற்கும் மனம் அவர்களுக்கு இல்லை. நம் மக்களை கூனி குறுகி அடிமை போல சொந்த அடையாளத்தை கூட சொல்ல முடியாதவர்களாக மாற்றும் பணியில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். பார்பனர்களை எதிர்க்கிறோம் ஜாதியை ஒழிக்கிரோம்னு சொல்லிட்டு இவர்கள் எதிர்ப்பது நம்மையும் நம் அடையளத்துயுமே. நாம் ஜாதி அற்றவர்கள் நமது அடையாளம் ஜாதிய அடையாளம் இல்லை என்பது வரலாறு. ஆனால் இந்த திராவிட தமிழ் தேசிய கூட்டம் நம் அடையாளத்தை ஜாதியாக்கி அதை கீழ ஜாதியாக்கி அதில் இன்பம் காண்கின்றனர். சாக்கியர்  என்பதும் வள்ளுவர் என்பதும் பறையர் என்பதும் இம்மண்ணின் பூர்வக்குடிகளின் பெயர்கள். அவற்றை ஜாதியாக்குவது பார்பனியம் ஹிந்துத்துவம் அதை ஜாதியாக நம் மீது திணிப்பது திராவிடம் தமிழியம். ஜாதி ஆற்ற மண்ணின் மைந்தகளை ஜாதி யாக்கும் பார்பனிய தரகர்கள். 

No comments: