Saturday, October 20, 2012

பெஹன்ஜி மாயவதி இசுலமியர்களை எல்லாம் ஜெய் பீம் சொல்ல வைக்கிராங்கன்னு இசுலாமியர்கள் அவர்களுக்கு எதிர்ப்பா பட்டுவா கொண்டு வந்தாங்க. அது சரின்னு சொல்லல. அவுங்க அப்படி இசுலமியர்கலை போர்சும் பன்னால. இத எதுக்கு சொல்றேன்னா? தலித் சிந்தனை தலித் சக்தி  எப்படி ஊடுருவி இருக்கு பாருங்க. எழுபது என்பதுகளில். தமிழ் நாடு மகாராஷ்டிரா மாநிலங்கள் இயக்கம் கட்டி அரசியல் பண்ணிட்டு இருந்த காலத்தில் உ பி இந்து ஆதிக்கத்தில் இருந்தது. அங்கு தலித்தியம் பேச முடியாது என்ற நிலை. ஆனால்  அங்க பதினைந்து வருஷம் அந்த அம்மா ஆட்சி செய்தங்க. அங்கு தலித் சிந்தனை தலித் இயக்கம் எவ்வளவு வேகமா போயிட்டு இருக்குன்னு ஒரு விஸ்ட் அடிச்சு பாருங்க. தலித் இயக்கதிற்கு அரசு பணத்தை செலவிட்டார்கள் என்று ஆதிக்க ஜாதிகள் எல்லாம் குய்யோ முய்யோன்னு கத்திட்டு இருக்காங்க. அங்க அவுங்க வைத்த அண்ணலின் பெயர்களை எல்லாம் இன்று சூத்திர அரசு மாத்திக்கொண்டு இருக்கிறது.  இங்க நம்ம அண்ணன் நான்தான் டுமில் தேசியத்த சேரிக்கு கொண்டு போனேன் நான் தான் பிரபகரனை  சேரிக்கு கொண்டு வந்தது என்று அசிங்கத்தை வேகமா சொல்லி பெருமை பட்டுக்கொள்கிறார். தமிழகத்தை பொறுத்தவரை ஹிந்துத்துவம் என்பது தமிழியம். வடா மாநிலங்களில் ஹிந்து மதம் மிக வேகமாக அழிகிறது. முக்கியமா நம்ம மக்கள் மிக வேகமா வெளியே  போயிட்டு இருக்காங்க. தமிழ் நாட்டில் தமிழ் தமிழ்மதம் தமிழ்கடவுள் தமிழ் கலாச்சாரம் தமிழ்பண்பாடு எனும் பெயரில் இந்து மதம் மிக ஆணித்தரமாக தன்னை வலுப்படுத்திக்கொள்கிறது. தமிழிய எதிர்ப்பு என்பது ஹிந்துத்துவ எதிர்ப்பு. தமிழியத்தையும் தமிழ் தேசியத்தையும் வேரறுக்காமல் ஹிந்துத்துவத்தை வேரறுக்க முடியாது. ஹிந்துத்துவத்தை வேரறுக்காமல் சாக்கியத்தை கொண்டு வர முடியாது. இதை திருமா மட்டும் அல்ல சீமானும்  புரிந்து கொண்டால் அவர்களுக்கும் விடுதலை.....

No comments: