Tuesday, October 16, 2012

எண்பதுகளில் தமிழகத்தில் தலித் எழுச்சியும் தி மு கா மாணவர் அணி செயலாளர் அண்ணன் திருமாவும்

எண்பதுகளில் தமிழகத்தில் தலித் எழுச்சியும்
தி மு கா மாணவர் அணி செயலாளர் அண்ணன் திருமாவும்

விடுதலை சிறுத்தைகள் கட்சி வருவதற்கு முன்னரே கடலூர் மாவட்டம் தலித் எழுச்சி மிக்க மாவட்டம். கடலூர மாவட்ட தலித் இயக்க தோழர்களுக்கு மூணு அல்லது நாலு ஜெனரேஷனா இயக்க அனுபவம் இருக்கிறது. கடலூர மாவட்டம் பறையர்களின் கோட்டை. திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு பாண்டிசேரி  கடலூர் விழுப்புரம்  மாவட்டங்களில் நூறு வருடங்களாக தலித் அமைப்புக்கள் செயல் பட்டு வருகின்றன.

விடுதலை சிறுத்தைகள் வந்துதான் நாங்க தலை நிமிர்ந்தோம்னு சொல்லுவது   நூறு ஆண்டு வரலாற்றை மறைப்பது.  ராமசாமி வந்து தான் தி கா வந்துதான்னு சொல்லிட்டு இருப்பது போல இருக்கு இது. என்பதுகளில்  கடலூர்  மாவட்டம்  முழுக்க வன்னியர்கள் நடத்திய வன்கொடுமைகளை எதிர்த்து தலித் மக்கள்  போராடியதை  நீங்கள் என்பதுக்கு பிறகு பிறந்து இருந்தால் பார்த்து இருக்க முடியாது. எண்பதுகளில் ஒவ்வொரு சேரியிலும் அண்ணலின் படம் போட்ட நீல நிற பெயர் பலகைகளும் நீல நிற கொடியும் கம்பீரமாக் நின்றதை நீங்கள் பார்த்து இருக்க மாட்டீர்கள். எண்பதுகளில் அப்பகுதிகளில் கம்பீரமாக் பறந்த தம்ம சக்கரம் போட்ட நீல கொடிகள் தான் இன்று நட்சதிர கொடிகள் பறக்க காரணம் என்பது வரலாறு. அண்ணலின் நீல கொடியும் அண்ணலின் படம் போட்ட பலகை எல்லாம் மாறிக்கொண்டு வருகிறது என்று தான் ஆதங்கம். அண்ணலும் புத்தரும் மட்டும் இருந்த பெயர் பலகைகள்  எல்லாம் பிரபாகரநின் பெயர் பலாகைகளாக மாற்றப்படுகின்றன என்பதே எங்கள் கவலை.

எண்பதுகளில்  கடலூர் மாவட்டம் அண்ணலின் கொள்கை பரப்பும்  மாவட்டமாக இருந்தது தலித் இயக்கம் தலித் கருத்தியல் மிகவும் அதிகமாக பேசப்பட்டது. திருமா பிறந்தது பெரம்பலூர் அவர் ஆரம்பத்தில் மதுரையில் இயக்கத்தை கட்டினாலும் அவரை வாரி அணைத்துக்கொண்டது கடலூர்தான். அரசியல் வேண்டாம் என்று இருந்த திருமாவை அரசியலுக்கு இழுத்ததும் கடலூர் மாவட்டம் தான்.

திருமா வந்து அங்கு தலித் இயக்கத்தை கட்டவில்லை. திருமாவை கடலூர மாவட்டம் தலித் அரசியலுக்குள் கொண்டு வந்தது. கடலூர் மாவட்டத்தில் கட்டமைக்கப்பட்டு இருந்த தலித் இயக்கம் தான் பின்னால் விடுதலை சிறுத்தைகளாக உருவானது. .

இன்னைக்கு நிறைய சிறுத்தைகள்  திருமாவுடன் இருந்தாலும் அவர்களுக்கு திருமா பேசும் தமிழ் தேசியத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்து கொன்துதான்  இருக்கிறது. ஆரம்ப காலத்தில் திருமாவுடன் இருந்த பெரும்பாலான் தோழர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் எல்லாம் அண்ணலின் இயக்கத்தில் உருவானவர்கள். திராவிட தமிழ் தேசியத்தில் பயிற்சி எடுத்து வந்தவர்கள் அல்ல. தலித் இயக்கம் இன்னும் கடலூரில் இருக்கிறது என்றால் அதற்க்கு காரணம் திருமா இல்லை அங்கு கட்டமைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கரின் இயக்கம். இல்லையெனில் இந்நேரம் முழுமையாக்அது  தமிழ் தேசிய இயக்கமாக  மாறி இருக்கும்.

 திருமாவையும் திராவிட  தமிழ் தேசியம் பேசும் கூட்டத்தை மீண்டும் மீண்டும் தலித் அரசியலுக்கு இழுத்து கொன்டு  வருபவர்கள் அவர்கள் தான். இதை சொன்னால் நான் வீ சி கே வை உடைக்கிறேன்னு சொல்லுவீங்க. ஆனா உண்மை அதுதான். தமிழ் தேசியத்தையும் திராவிடத்தையும் ராமசாமியிசத்தையும் எதிர்க்கும் பலர் இன்னும் வி சி கா வில் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

அதற்க்கு காரணம் வி சி கே நமது இயக்கம் அது தமிழ் தேசிய கட்சியாக ஆகி விட கூடாது அதை முழுமையாக தலித்திய கட்சியாக இயக்கமாக ஆக்க நம்மால் முடியும் என  நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

திருமா எனும் தலைவரை நாம் எதிர்க்கவில்லை அவர்  தமிழ் தேசியத்துக்கு தொண்டு செய்வதையே எதிர்க்கிறோம். தமிழக வரலாற்றில் தமிழியமும் திராவிடமும் இந்துத்துவம் வட நாட்டில் செய்யும் வேலையை செய்து கொண்டு இருக்கிறது. பக்தி இயக்க காலம் தொட்டு தமிழ் தமிழ் உணர்வு என்பது சாக்கியர்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட ஒரு கோட்பாடு இயக்கம்.

அதற்க்கு நம் சமூக மக்கள் இரை  ஆவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஈழத்தில் குசு உட்டா  கூட அதை மிகப்பெரிய இன அழிப்பு என சொல்ல  ஆயிரம் பத்திரிக்கைகளும் டி வி சானல்களும் மீடியாக்களும் உள்ளன. ஆனால் இங்கு நம் மக்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமையை  சொல்ல, எழுத, பேச ஒரு மீடியாவும் கிடையாது. நமக்கு டி வி சானல்  வேண்டும் என்பதில் எனக்கு மறுப்பு இல்லை. ஒரு சிலர் சொல்லுவது போல டி வி எதற்கு சோறு போடு படிப்பு சொல்லு என பழைய பஞ்சாங்கம் பேச வில்லை. ஆனால், அந்த சானலை தமிழ் தேசிய சானலா ஆக்குவது தான் நம்முடைய வயித்து எரிச்சல். அதுக்கு போடும்  பணம் எல்லாம் நம்ம பணம் ஆனா நாளைக்கு தினமும் கலையிலும் மாலையிலும் பிரபாகரன் படத்த போட்டு நம்ம குடியை  கெடுப்பீங்க.

நமது வருங்கலதுக்கு புத்தனை, வள்ளுவனை, பண்டிதரை, தாத்தாவை, அண்ணலை காட்டுவதற்கு பதில் துப்பாக்கியையும் வெடி குண்டையும் தனது கலாச்சாரம் ஆக்கிய ஒரு பன்னாட்டு ஆயுத கடத்தல்காரனை காட்டிக்கொண்டு இருப்பார்கள். சமூகம் நல்லா  முன்னேறும் சமூகம் நல்லா  உருப்படும். நீங்க எல்லோரும் செய்யும் ஆயிரம் களப்பணியை அண்ணன் திருமா பிரபாகரன் புகழ் பாடி அதல பாதாலத்துல கொண்டு போய்க்கொண்டு இருக்கிறார். சமூக விடுதலை இயக்கம் என்பது விளம்பர அரசியல் அல்ல. விளம்பரம் இல்லாமல் ஆயிரம் ஆயிரம் தலித் இயக்க தலைவர்களும் தொண்டர்களும் தோழர்களும் மூலை முடுக்குகளில் பட்டி தொட்டிகளில் நடத்தும் இயக்கம். அது பல வித பரிமானங்கலை கொண்டது......

No comments: