Friday, October 19, 2012

பேருக்கு பின்னால ஜாதிய போட்டுக்கணுமா இல்லையான்னு ஜாதி இந்து முடிவு பண்ணனும். பேருக்கு முன்னால பின்னால வள்ளுவா, பறையா, சம்மார், சக்கிலியா, மாதிகா, மள்ளா, பள்ளான்னு போட்டுக்கணுமா இல்லையான்னு நாங்க ஜாதியாற்ற  சாக்கியர்கள் முடிவு பண்ணுவோம். ஏன்னா இவை எல்லாம் ஜாதியல்ல "ஜாதியை" "ஜாதி இந்துவை" "ஜாதி டமிலனை" "ஜாதி ஆதிக்கத்தை" எதிர்த்த எதிர்க்க வந்த அடையாளங்கள். ஒருத்தன் என் மாவட்டம், வட்டம், கிராமம், தெரு எல்லத்தையும் கேட்டு நான் யார் என தெரிந்து கொள்வதை விட நானே நான் யார் என அவனுக்கு சொல்லி அவன் ஜாதி திமிரை அடக்கும் அடையாளங்கள். இந்த அடையாளங்களை தைரியமாக போட்டு முக நூலில் வளம் வரும் என் சொந்தங்களுக்கு ஜெய் பீம். அவுரு தமிழன் திராவிடன்னு போட்டுக்கிட்டா  பொதுவாம் நாம நம்ம அடையாளத்தை போட்டுக்கிட்டா சுய ஜாதி பிரியர்களாம்.  

No comments: