Sunday, November 18, 2012

1984 இல் ஊர் தெரு சேரி என எல்லா இடங்களிலும் ஜயவர்தனாவின் உருவங்களை எரித்து தமிழ் இன உணர்வை ஊட்டினர் அன்றைய திராவிட சூத்திர கூட்டமும் அவர்களோடு ஜிங் ஜக்கா போட்டு கொண்டிருந்த மானமும் ஹீனமும் அற்ற ஒருசில ஜிங் ஜக்கா கூட்டம். அன்னைக்கும் சரி இன்னைக்கும் சரி அம்பேத்கர் வாதிகளுக்கு தமிழ் இன உணர்வு வந்ததே இல்லை இனியும் வராது. அன்று அண்ணலின் வழியை பின்பற்றிய எவரும் ஜயவர்தனா   உருவ பொம்மைகளை எரிக்கவில்லை. இன்று அண்ணலின் வழியை பின்பற்றும்  எவரும் ராஜபக்ஷே உருவ பொம்மைகளை கொளுத்தவில்லை. 1984 இல் திராவிட கட்சிகளிடம்  கேட்ட அதே கேள்வியை தான் 2012 இல் தமிழ் தேசியம் பேசும் சூத்திர கூட்டங்களிடமும் அவர்களுக்கு ஜிங் ஜக்கா போடு கூட்டங்களிடமும் கேட்கிறோம். எங்களுக்கு எதற்கு தமிழ் இன உணர்வு வரவேண்டும். நானும் நீயும்  தமிழனா? நானும் நீயும் தமிழன் என்றால் அன்று எங்கள் உடல்கள்  கீழ்வென்மணியில் எரிந்தபோதும் இன்று எங்கள் வீடுகள் தர்மபுரியில் எறிந்த போதும் நீங்கள் எவன் -------- புடிங்க போனீங்க. 

No comments: