Tuesday, November 20, 2012

வன்னியரிலும் நல்லவர்கள் இருக்கிறர்களாம். வன்னியராகவே இருந்து கொண்டு அவர்கள் நல்லவர்களாக இருக்கிறார்களா? இல்லை எனக்கு வன்னிய குல ஷத்திரியர் சூ த்திரர் பதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டு  நல்லவர்களாக இருக்கிறார்களா?  வன்னியர் சங்க உறுப்பினராக உள்ளாரா இல்லை உறுப்பினர் பதவியை ரிசையின் செய்து விட்டார்களா? பெரும்பான்மையான வன்னியர்கள் நல்லவர்களா? அல்லது சிலர் மட்டும் நல்லவர்களா?  சிங்களவர்களில் நல்லவர்களே இல்லையா?  அப்புறம் எதுக்கு சிங்களவர்கள் எல்லோருமே கெட்டவர்கள் மாதிரியும் தமிழர்கள் எல்லோரும் நல்லவர்கள் மாதிரியும் பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கீங்க? பார்ப்பனர்களில் நல்லவர்கள் இல்லையா? அப்புறம் எதுக்கு பார்பனர் எல்லோரு கெட்டவர்கள் மாதிரி பிரச்சாரம் பண்ணிட்டு இருக்கீங்க. அண்ணல் அம்பேத்கர் ஜாதி இந்துக்கள் மனித உடலில் திரியும் மிருகங்கள் என்று சொல்கிறார். அது ஒரு சில வன்னியர்களுக்கு மட்டும் பொருந்துமா? இல்லை எல்லா வன்னியர்களுக்கும் பொருந்துமா? வன்னியராகவே பார்ப்பனராகவே ஜாதி இந்துவாகவே இருந்து கொண்டு ஒருவர் நல்லவராக இருக்க முடியுமா? பால்தாக்கரே கூட நல்லவர்ன்னு சொல்றாங்க. ராமதாஸ் - நீங்க நல்லவரா? கெட்டவரா? நாலு பேருக்கு (வன்னியர்களுக்கு மட்டும்) நல்லது செய்யனும்னா  சேரிகளை எரிப்பதில் தப்பே இல்லை - "வேலு" நாயக்கன் சொல்றாரு......

No comments: